Home இலங்கை உள்ளூராட்சித் தேர்தல் முடிவடைந்த பின்னர் வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்களுக்கு நிரந்தர நியமனம் – போராட்டம் கைவிடப்பட்டது

உள்ளூராட்சித் தேர்தல் முடிவடைந்த பின்னர் வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்களுக்கு நிரந்தர நியமனம் – போராட்டம் கைவிடப்பட்டது

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

உள்ளூராட்சித் தேர்தல் முடிவடைந்த பின்னர் வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும் என மத்திய சுகாதார அமைச்சர் உறுதிமொழி வழங்கினார் என மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்தார்.

இந்த உறுதிமொழியை அடுத்து யாழ்ப்பாணத்திலுள்ள மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்பாக இன்று காலை முதல் முன்னெடுத்த கவனயீர்ப்பு போராட்டத்தை சுகாதாரத் தொண்டர்கள் பிற்பகல் கைவிட்டனர்.

நிரந்தர நியமனம் கோரி ஆளுநர் அலுவலகத்தின் முன்னால் இன்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சுகாதார் தொண்டர்களை ஆளுநர் சந்தித்து கலந்துரையாடினார்.

மத்திய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவுடன் தொலைபேசியில் உரையாடியதன் பின்னர் சுகாதாரத் தொண்டர்களை அழைத்து இந்த உறுதிமொழியை அவர் வழங்கினார்

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More