Home இலங்கை மக்களின் தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்க முடியாது தப்பியோடிய வாள்வெட்டுக் குழுவினர் காவற்துறையிடம் சிக்கியுள்ளனர்…

மக்களின் தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்க முடியாது தப்பியோடிய வாள்வெட்டுக் குழுவினர் காவற்துறையிடம் சிக்கியுள்ளனர்…

by admin

கோப்பு படம்..
யாழ்ப்பாணம் கோண்டாவில் கடையொன்றில் கொள்ளையிட முயற்சித்த வாள்வெட்டுக் குழுவினரை காவற்துறையினர் கைதுசெய்துள்ளனர்.. 18 மற்றும் 22 வயதுகளை உடைய, கொக்குவில் மற்றும் கோண்டாவில் பகுதிகளைச் சேர்ந்த இருவரே கைதாகியுள்ளனர். இவர்களிடம் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் கடந்த வாரம் வாள்வெட்டுக் குழுவினர் தமது அடாவடித்தனங்களில் ஈடுபட்டதோடு, நகைகளும் பணமும் கொள்ளையிட்டுச் சென்றனர். இந்தச் சம்பவங்களுடன் இவர்களுக்கும் தொடர்பிருக்கலாமென சந்தேகிக்கும் காவற்துறையினர் இது குறித்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

இதே வேளை முன்னதாக கோண்டாவில் பகுதிக்குள் நுழைந்த இவர்களை, அப்பகுதி மக்கள் துரதிச் சென்று தாக்கியுள்னர். நேற்று (16.12.17) வாள்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் சகிதம் கோண்டாவில் பகுதிக்குள் நுழைந்த இவர்களை ஊர்மக்கள் ஒன்றிணைந்து சரமாரியாக தாக்கி விரட்டியுள்ளனர். இதனையடுத்து வாள்வெட்டுக் குழுவினர் வாள்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை விட்டு தப்பியோடிருந்தனர்.. இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள் கோப்பாய் காவற்துறையில் ஒப்படைக்கப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More