Home இந்தியா பெரியபாண்டியனை சுட்டுக் கொன்ற நாதுராமின் மனைவி மஞ்சுவும் கைது:-

பெரியபாண்டியனை சுட்டுக் கொன்ற நாதுராமின் மனைவி மஞ்சுவும் கைது:-

by admin

ராஜஸ்தானில் தமிழக காவற்துறை    அதிகாரி, சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில்,  கொலையாளி நாதுராமின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தான் சென்ற தனிப்படை காவற்துறையினர், கொள்ளை குழுவைச் சுற்றி வளைத்த போது, கொள்ளை குழுவினர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து,  காவற்துறை அதிகாரி    பெரிய பாண்டியனிடம் இருந்த துப்பாக்கியை பறித்து அவரை கொள்ளையர் நாதுராம்  சுட்டுக்கொன்ற பின் தப்பிச் சென்றார்.

இதனையடுத்து, கொலையாளியை பிடிக்கும் பணியில் இரு மாநில காவற்துறையினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கொலையாளி நாதுராமின் மனைவி மஞ்சுவை இன்று போலீசார் கைது செய்தனர்.

இதே வழக்கில் இரண்டு நாட்களுக்கு முன்னர் நாதுராமின் நண்பர்கள் 4 பேரை காவற்துறையினர் கைது செய்தனர். தேஜாராம், அவரது மனைவி பித்யா, மகள்கள் சுகுனா, ராஜல் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நால்வரும் தமிழக காவற்துறையினர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் என்று கூறப்படுகிறது. பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்ட செங்கல்சூளை தேஜாராமுக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More