Home உலகம்ஈராக்கிய குர்திஸ்தானில் ஆர்ப்பாட்டம்

ஈராக்கிய குர்திஸ்தானில் ஆர்ப்பாட்டம்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஈராக்கிய குர்திஸ்தானில் பாரியளவில் இரண்டாவது நாளாகவும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. பொதுத்துறை பணியாளர்களுக்கான சம்பளங்கள் உயர்த்தப்படாமையை எதிர்த்து இந்தப் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. நாட்டின் பிரதான அரசியல் கட்சிகளின் அலுவலகங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் உடைத்துள்ளனர்.

ஆசிரியர்கள், மாணவர்கள், சிவில் பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் இந்தப் போராட்டங்களில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. சுலைமானியா நகரில் இடம்பெற்ற போராட்டத்தின் போது பாதுகாப்புப் படையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் வெடித்துள்ளது. இந்த மோதல் சம்பவத்தின் காரணமாக ஆறு பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More