Home இலங்கை வெற்றிகரமாக நடந்தது முடிந்தது திறந்த இதய சத்திர சிகிச்சை – த.சத்தியமூர்த்தி:-

வெற்றிகரமாக நடந்தது முடிந்தது திறந்த இதய சத்திர சிகிச்சை – த.சத்தியமூர்த்தி:-

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் திறந்த இதய  அறுவைச் சிகிச்சை ஒன்று வெற்றிகரமாக நடைபெற்றுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி .சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். விசேட வைத்தியகுழுவினால் இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. யாழ் வைத்தியசாலையில் கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் பல இதய சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும்இ மிக அண்மையில் வெற்றிகரமாக செய்யப்பட்ட சத்திரசிகிச்சை இதுவென்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவைச் சேர்ந்த 27 வயதான ஒருவருக்கு நேற்றைய தினமும் இன்றும் திறந்த இதய சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் குறித்த நபர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். இதேவேளை இந்த வெற்றிகரமான அறுவை சிகிச்சையை முன்னெடுத்த வைத்தியகுழுவுக்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More