Home இலங்கை வவுனியா பேருந்து நிலையத்தில் பதற்றம்

வவுனியா பேருந்து நிலையத்தில் பதற்றம்

by admin


வவுனியா இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான  வவுனியா பேருந்து நிலையத்தில் இருந்து வவுனியா தனியார் பேருந்துகள் உள்ளூர் சேவைகளை முன்னெடுக்கச் சென்ற போது இ.போ.சபையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தியுள்ளதனால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று இடம்பெற்ற இந்த சம்பவத்தினையடுத்து அங்கு அதிகளவான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இரண்டு பேருந்து சேவைகளையும் சேவையில் ஈடுபடுமாறு முதலமைச்சரால் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்த போதும் இதனை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை போக்குவரத்து சபை தரப்பினர் சில பிரச்சினைகளை முன்வைத்துள்ளனர்.

அத்துடன், தற்பொழுது பண்டிகைக்காலம் என்பதால் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து முழுமையான சேவையை மேற்கொள்வதை இரண்டு வாரங்களுக்கு பிற்போடுவது என தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும், இடைப்பட்ட காலப்பகுதியில் தனியார் பேருந்தின் உள்ளூர் சேவைகள் மட்டும் பழைய பேருந்து நிலையத்தில் இருந்தும், தூர இடங்களுக்கான சேவைகள் புதிய பேருந்து நிலையத்தில் இருந்தும் செயற்படுத்துவதற்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் உத்தரவிட்டுள்ளதாக, முதலமைச்சர் அமைச்சின் சிரேஷ்ட செயலாளர் விஜயலட்சுமி கேதீஸ்வரன் நேற்றையதிம் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, இன்று காலை வவுனியா இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து நிலையத்துக்கு தனியார் பேருந்துகள் உள்ளூர் சேவைகளை முன்னெடுக்கச் சென்றபோது இலங்கை போக்குவரத்து சபையினர் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More