Home சினிமா “அதிகாரம் படைத்த ஆண்களின் ஆசைக்கு அடி பணிய மறுத்தேன் ”

“அதிகாரம் படைத்த ஆண்களின் ஆசைக்கு அடி பணிய மறுத்தேன் ”

by admin


பொலிவுட்டில் இசைந்து போகாததால் (அட்ஜஸ் பண்ணாததால்) தான் சந்தித்த பிரச்சனைகள் குறித்து பிரியங்கா சோப்ரா மனம் திறந்து பேசியுள்ளார். ஹொலிவுட்டின் முன்னணி நடிகையாக உள்ள பிரியங்கா சோப்ரா ஹொலிவுட் படங்கள், தொலைக்காட்சி தொடர் என அசத்திக் கொண்டிருக்கிறார். ஹொலிவுட்டில் அவர் அடைந்துள்ள வெற்றியை கண்டு சில பொலிவுட் நடிகைகள் மெய்சிலிர்க்கின்றனர். இந்நிலையில் சினிமா பற்றி பரியங்கா சோப்ரா முக்கிய விடயங்களை வெளிப்படுத்தி உள்ளார்.

“பொலிவுட்டில் சிலர் பரிந்துரைக்காமையினால் என்னை படத்தில் இருந்து நீக்கியுள்ளனர். நான் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆன பிறகு நாயகன் (ஹீரோ) அல்லது இயக்குனரின் காதலியை நடிக்க வைக்க பரிந்துரை செய்யப்பட்டதால் என்னை வெளியேற்றியுள்ளனர். நாயகன் (ஹீரோ) அல்லது இயக்குனரின் காதலிக்காக என் வாய்ப்பு பறிக்கப்பட்டபோது என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. ஏனென்றால் அதிகாரம் படைத்த ஆண்களின் ஆசைக்கு பணிந்து போக நான் மறுத்துவிட்டேன்.

நான் பட வாய்ப்புக்காக இசைந்துபோக (அட்ஜஸ்ட்) மறுத்துவிட்டேன். எனக்கு மரியாதை அளிக்கும் சக நடிகர், நடிகைகளுக்கு மட்டுமே நான் மரியாதை கொடுப்பேன். நான் எடுக்கும் முடிவுகளுக்கு என் குடும்பம் ஆதரவாக உள்ளது. அது தான் என் மிகப் பெரிய பலம். சினிமா துறையில் பெண்கள் மட்டும் அல்ல ஆண்களும் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு செல்கிறார்கள் என பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More