Home இலங்கை இணுவிலின் இரு பகுதிகளை கோண்டாவிலுடன் இணைக்கும் முயற்சி – எதிர்ப்பு போராட்டம்

இணுவிலின் இரு பகுதிகளை கோண்டாவிலுடன் இணைக்கும் முயற்சி – எதிர்ப்பு போராட்டம்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


இணுவில் கிராமத்தின் இரு பகுதிகளை கோண்டாவிலுடன் இணைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று இணுவிலில் மௌனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.அரசியல் சுயநலன்களுக்காக எல்லை மீள் நிர்ணயத்தின்போது இணுவில் கிராமத்தின் இரு பகுதிகளை கோண்டாவிலுடன் இணைத்து தொன்மைமிகு இணுவில் துண்டுபோடும் கைங்கரியம் இணுவிலில் உள்ள சில புத்திஜிவிகளால் திரைமறைவில் செயற்பட்டுவருவதாக இணுவில் கிராம மக்களால் குற்றஞ்சாட்டப்பட்டது.

இது தொடர்பில் ஆராயும் மக்கள் ஒன்றுகூடல் ஒன்று நேற்று இணுவில் சிவகாமி அம்மன் மண்டபத்தில் நடைபெற்றது. அங்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் இணுவிலைத் துண்டாடும் குறித்த முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும் இணுவில் நிலத்தை மீட்பதற்குமான மௌன ஊர்வலம் இன்று இணுவில் கந்தசுவாமி கோவில் முன்பாக இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமானது.

குறித் மௌன ஊர்வலம் உடுவில் பிரதேச செயலக அலுவலகத்தை அடைந்து அங்கு உடுவில் பிரதேச செயலரிடம் மனு கையளித்தலுடன் நிறைவுபெற்றது.

 

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More