Home இலங்கை போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் தம்பதியினருக்கு விளக்கமறியல்

போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் தம்பதியினருக்கு விளக்கமறியல்

by admin


கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் ஹெரோயின் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் தம்பதியினரை 7 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டுபாயிலிருந்து இலங்கை வந்த விமானத்தில் ஹெரோயின் போதைமாத்திரைகளுடன் வந்த பாகிஸ்தானிய தம்பதியர் நேற்றையதினம் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

குறித்த தம்பதியினர் 350 கிராம் நிறையுடைய 35 ஹெரோயின் போதை மாத்திரைகளை விழுங்கிக் கொண்டு இலங்கைக்கு வருகை தந்ததனையடுத்து போதைப்பொருள் தடுப்பு காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.அதனை அடுத்து , நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு போதை மாத்திரைகளை வெளியில் எடுக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் 44 மற்றும் 67 வயடைய பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ள நிலையில் இருவரும் இன்றையதினம் நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே அவர்களை 7 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More