Home இலங்கை நான் இந்தக் கதிரையில் இருக்கும் வரை வடக்கு – கிழக்கு இணைப்பு – சமஸ்டி இல்லை

நான் இந்தக் கதிரையில் இருக்கும் வரை வடக்கு – கிழக்கு இணைப்பு – சமஸ்டி இல்லை

by admin


ரணில் விக்கிரமசிங்க, மீண்டும் பிரதமராக தெரிவு செய்யப்பட்டால், ஜனாதிபதி கதிரையில் ஒரு மணிநேரமேனும் தான் இருக்கமாட்டேன் எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவிவிலகி வீதியில் இறங்கி மகிந்­த­வுடன் இணைந்து செயற்­படத் தயராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கை மீண்டும் இணைப்பதற்கு, தான் இந்த ஜனாதிபதி கதிரையில் இருக்கவில்லை எனக்குறிப்பிட்டுள்ள அவர் தான் . இந்தக் கதிரையில் இருக்கும் வரையிலும் வடக்கு, கிழக்கை மீண்டும் இணைக்கப்போவதும் இல்லை என்பதுடன் சமஸ்டியை வழங்கப் போவதும் இல்லை எனவும் அவ்விரண்டையும் அடையவேண்டுமாயின் முதலில் தன்னை கொலைச் செய்யவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற சுதந்­தி­ரக்­கட்­சியின் அமைப்­பா­ளர்கள் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்­றரை வரு­டங்­க­ளாக இடம்­பெற்ற ஆட்­சியில் பெறு­ம­தி­யில்­லாத நிலை­யி­லேயே தான் இருந்ததாகவும் 2015 ஆம் ஆண்டு மஹிந்­தவின் ஆட்­சி­யி­லி­ருந்து எவ்­வாறு அதி­ருப்­தி­யுடன் வில­கி­னேனோ அத­னை­விட அதி­க­மான அதி­ருப்­தி­யு­ட­னேயே தற்­போது அர­சாங்­கத்­தி­லி­ருந்து வெளி­யே­றியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More