Home உலகம் கிறிஸ்தவ பெண்ணுக்கு எதிராக போராடுபவர்கள் மாநில அரசுடன் மோத வேண்டாம்….

கிறிஸ்தவ பெண்ணுக்கு எதிராக போராடுபவர்கள் மாநில அரசுடன் மோத வேண்டாம்….

by admin

மத அவமதிப்பு வழக்கில் விடுவிக்கப்பட்ட கிறிஸ்தவ பெண்ணுக்கு எதிராக போராடுபவர்களை, மாநில அரசுடன் மோத வேண்டாம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாகிஸ்தானில் சிறுபான்மையினத்தவரான கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த ஆசியா பீபி தனது அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட முரண்பாட்டின் போது முகம்மது நபியை தரக்குறைவாக பேசியதாக மத அவமதிப்பு வழக்கை எதிர்கொண்டு வந்தமையினால் அவருக்கு கடந்த 2010-ம் ஆண்டு மரண தண்டனை விதித்து விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து ஆசியா பீபி, தனது மரண தண்டனையை ரத்து செய்யுமாறு பாகிஸ்தான் உச்சநீதிமன்றில்  மேல்மூறையீடு செய்திருந்தார். நேற்றையதினம் இந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் ; ஆசியா பீபிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து தீர்ப்பளித்திருந்தது.

ஆசியா பீபியினை விடுவித்து வெளியான தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், லாகூர், கராச்சி உள்ளிட்ட பெருநகரங்களிலும் நாட்டின் பிறபகுதிகளிலும் இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்த பலர் போராட்டங்களிலும், ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையிலேயே மத அவமதிப்பு வழக்கில் விடுவிக்கப்பட்ட கிறிஸ்தவ பெண்ணுக்கு எதிராக போராடுபவர்களை, மாநில அரசுடன் மோத வேண்டாம் எனவும் இது விடயமாக பொதுமக்களை தூண்டி விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எச்சரித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More