Home சினிமா 25 வயது வரை தற்கொலை எண்ணம் என்னை வாட்டியது

25 வயது வரை தற்கொலை எண்ணம் என்னை வாட்டியது

by admin


இசைப்புயல் ஒஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் தனது 25 வயது வரை தற்கொலை எண்ணம் தன்னை வாட்டியதாக தெரிவித்துள்ளார். அவ்வப்போது நம்மில் பலரும், நாம் சிறப்பானவன் கிடையாது என நினைக்கிறோம். நான் என் தந்தையை இழந்ததால் இவ்வாறு உணர்ந்திருக்கிறேன். அதன்பின் பல நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்தன

அவை எல்லாமும் செயலற்று போனதாக இருந்தது. என் தந்தையும் இறந்து விட்டதால், நான் அதிக திரைப்படங்களை ஏற்கவில்லை. எனக்கு 35 திரைப்படங்கள் கிடைத்த போதும் அவற்றில் இரண்டை மட்டுமே தேர்வு செய்தேன். மரணம் அனைவருக்கும் நிரந்தரமான ஒன்று. எல்லாவற்றுக்கும் முடிவு காலம் இருக்கும் போது, ஏன் பயம் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஒருவிதத்தில் எனக்குள் தைரியத்தை ஏற்படுத்தியது.

என் வாழ்க்கையின் கடினமான சூழ்நிலைகள் எனக்குள் தைரியத்தை ஏற்படுத்தின என ஏ.ஆர். ரஹ்மான் தன் வாழ்வில் ஏற்பட்ட கடினமான நிகழ்வுகளை தன் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More