Home இலங்கை ஏற்கனவே எடுத்த தீர்மானங்களை மாற்ற முடியாது

ஏற்கனவே எடுத்த தீர்மானங்களை மாற்ற முடியாது

by admin


தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் இன்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது . சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் இடம்பெற்ற இந்த சந்திப்பின் பொது நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலை தொடர்பில் மிக நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில், திரு செல்வம் அடைக்கலநாதன் , த .சித்தார்த்தன் ,  . எம்ஏ.சுமந்திரன் ஆகியோர் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந் சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர்.

இதன்போது ஜனாதிபதி சில முடிவுகள் எடுக்கப்பட்டதன் பின்னணி குறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் குழுவினருக்கு விளக்கமளித்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பினாலும் அதன் பாராளுமன்ற உறுப்பினர்களாலும் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கான காரணங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பின் குழுவினர் ஜனாதிபதி அவர்களுக்கு எடுத்துரைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இத்தீர்மானங்கள் ஏற்கனவே பகிரங்கமாக முழு நாட்டிற்கும் உலகிற்கும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன எனவும் தாம் ஏற்கனவே எடுத்த தீர்மானங்களை மாற்ற முடியாது எனவும் அத்தீர்மானங்களின் படியே தாம் செயற்படுவோம் என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஜனாதிபதிக்கு எடுத்துரைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

அனைத்து கட்சிகளினுடைய இணக்கப்பாட்டோடு நாட்டின் அரசியல் சூழ்நிலையை சுமூகநிலைக்கு கொண்டு வருவதற்காக எதிர்காலத்தில் ஜனாதிபதி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அவரோடு கலந்தாலோசித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது முழுமையான ஆதரவை கொடுக்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு குழு ஜனாதிபதிக்கு உறுதியளித்தார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்நிலையை விரைவாக அடைவதற்கு தற்போது யோசித்துள்ள திகதிக்கு முன்னதான ஒரு திகதியில் பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டுமென்று ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்ததாகவும் இவ்வேண்டுகோளை தான் கவனமாக ஆராய்வதாக ஜனாதிபதி உறுதியளித்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More