Home இந்தியா குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக அசாமில் 29 அமைப்புகள் ஆர்ப்பாட்டம் :

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக அசாமில் 29 அமைப்புகள் ஆர்ப்பாட்டம் :

by admin

இந்திய மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அசாமில் இன்று 29 அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளன.  மத்திய பாஜக அரசு கடந்த 2016ம் ஆண்டு குடியுரிமை சட்டம் 1955ல் திருத்தங்கள் செய்து மக்களவையில் தாக்கல் செய்தது. அந்த திருத்தத்தின்படி பங்காளதேஸ், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து 2014ம் ஆண்டு டிசம்பர் 31-ம் திகதிக்கு முன்பு வந்து இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களில் இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், சமணர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த சட்டத்திருத்த மசோதாவிற்கு அசாம் மாநிலத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில் 46 அமைப்புகள் சார்பில் கடந்த மாதம் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் அசாம் மாணவர் அமைப்பான ஏஏஎஸ்யு மற்றும் 28 அமைப்புகள் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடத்தப்பட்டது. கவுகாத்தியின் கணேஷ்குரியில் இருந்து திஸ்பூர் வரை இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் , ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More