Home சினிமா புதிய அவதாரம் எடுக்கும் ‘சித்திரம் பேசுதடி’ நரேன்

புதிய அவதாரம் எடுக்கும் ‘சித்திரம் பேசுதடி’ நரேன்

by admin


சித்திரம் பேசுதடி, அஞ்சாதே முதலிய திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகர் நரேன் தற்போது புதிய அவதாரத்தில் ஊடாக மீள் பிரவேசம் செய்கின்றார். கன்னடத் திரையுலகில் வாசு என்ற வெற்றித் திரைப்படத்தை இயக்கிய அஜித் வாசன், தற்போது `கண் இமைக்கும் நேரத்தில்’ என்ற புதிய படத்தை இயக்குகின்றார். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மூன்று மொழிகளில் தயாராகி வருகிறது.

நள்ளிரவு ஒரு மணி முதல் நான்கு மணி வரை நடக்கும் ஒரு சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட சண்டை மர்மப் படத்தை இயக்குனர் அஜித் உருவாக்கி வருகிறார். புதுமுகங்கள் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றது.

இந்த படத்தை அஜித் வாசனுடன் நடிகர் நரேனும் இணைந்து தயாரிக்கிறார். இதன்மூலம், சித்திரம் பேசுதடி, அஞ்சாதே ஆகிய படங்களில் நடித்து பிரபலமான நரேன் இப்படத்தின் ஊடாக தயாரிப்பாளராக அறிமுகமாகிறார். இப்படத்தின் முதல் சுவரொட்டியை (பர்ஸ்ட் லுக் போஸ்டர்) நடிகர் கார்த்தி, மற்றும் நரேன் வெளியிட்டுள்ளனர். விரைவில் இப்படத்தின் முன்னோட்டத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More