Home இலங்கை ஜனாதிபதி செயலகத்தில் மைத்திரி ரணில் மகிந்த

ஜனாதிபதி செயலகத்தில் மைத்திரி ரணில் மகிந்த

by admin

அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்காக பிரதமர் மகிந்த ராஜபக்ஸ சென்றுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறும் கூட்டத்திற்கு ஜனாதிபதி, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அனைத்து கட்சி உறுப்பினர்களும் ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றுள்ளனர்.

.தற்போது கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்கட்சித் தலைவருமான இரா சம்பந்தனும் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி மற்றும் பாராளுமன்றத்தில் கடந்த சில நாட்களாக இடம்பெற்ற அரசியல் அமைதியின்மை மற்றும் குழப்ப நிலையை முடிவுக்கு கொண்டுவந்து பாராளுமன்ற நடவடிக்கைகளை சிறப்பாக முன்னெடுப்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இடையில் உடன்பாடொன்றை ஏற்படுத்தும் முகமாக இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை இக் கலந்துரையாடலை சபாநாயகர் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியினர் புறக்கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More