Home உலகம் ஊட்டச்சத்து குறைபாட்டினால் ஏமனில் மூன்று வருடங்களில் 85,000 குழந்தைகள் பலி

ஊட்டச்சத்து குறைபாட்டினால் ஏமனில் மூன்று வருடங்களில் 85,000 குழந்தைகள் பலி

by admin


ஏமனில் கடந்த மூன்றாண்டுகளாக நடந்து வரும் போரின் காரணமாக கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு ஐந்து வயதிற்குட்பட்ட சுமார் 85,000 குழந்தைகள் உயிரிழந்திருக்கலாம் என மதிப்பீடுகள் தெரிவிப்பதாக முன்னணி தொண்டு நிறுவனமொன்று தெரிவித்துள்ளது.

ஏமனில் உயிரிழந்துள்ள குழந்தைகளின் எண்ணிக்கை, பிரித்தானியாவின் இரண்டாவது மிகப் பெரிய நகரமான பேர்மிங்ஹாமிலுள்ள ஒட்டுமொத்த ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கைக்கு சமம் என சேவ் த சில்ரன் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஏமனில் அதிகபட்சம் 14 மில்லியன் மக்கள் பஞ்சத்தின் பிடியில் சிக்கியுள்ளதாக கடந்த மாதம் ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்தநிலையில் உலகிலேயே மோசமான மனிதாபினாம நெருக்கடியாக கருதப்படும் ஏமன் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு ஐநா சபை முயற்சித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More