Home இலங்கை 2020 ஆம் ஆண்டு  ஓகஸ்ட் மாதமே,  பாரா­ளு­மன்றத் தேர்தல் நடத்­தப்­படும்…..

2020 ஆம் ஆண்டு  ஓகஸ்ட் மாதமே,  பாரா­ளு­மன்றத் தேர்தல் நடத்­தப்­படும்…..

by admin

2020 ஆம் ஆண்டு  ஓகஸ்ட் மாதமே  பாரா­ளு­மன்றத் தேர்தல் நடத்­தப்­படும் எனவும்  அதற்கு இடைப்­பட்ட காலத்தில் பாரா­ளு­மன்­றத்தைக் கலைப்­ப­தற்கு ஒரு­போதும் இடமளிக்கப்போவதில்லை எனவும் ஜனா­தி­பதி தேர்­த­லை முதலில்  நடத்­த­வேண்­டி­யதே   அவ­சி­ய­மாகும்  எனவும்   ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க  தெரி­வித்­துள்ளார்.

நேற்றையதினம்  அல­ரி­மா­ளி­கையில் நடை­பெற்­ற ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின்    மாவட்ட  அமைப்­பா­ளர்­க­ளது  கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், நம்­பிக்­கை­யில்­லாப் ­பி­ரே­ரணை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­ப­டும்­போது பெரும்­பான்மை பலம் இருந்தால் அதனை நிரூ­பிக்­கலாம். அதனை தவிர்த்து பாராளுமன்றைக்  குழப்­பு­வ­தா­னது ராஜ­ப­க்ஸ­வி­ன­ருக்கு பெரும்­பான்மைப் பலம் இல்லை என்­பதை எடுத்­துக்­காட்­டு­கின்­றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை வெற்­றி­பெற்­று­விட்­ட­தாக சபா­நா­யகர் அறி­வித்­த­தி­லி­ருந்து அமைச்­ச­ரவை கலைந்­து­விட்­டது. அதனால் பிர­த­ம­ருக்கு நிதி  ஒதுக்கீடு செய்ய முடி­யாது. அந்த யோச­னையை ரவி கரு­ணா­நா­யக்க முன்­வைத்­தி­ருக்­கின்றார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒக்­டோபர் 26 ஆம் திகதி நடத்­தப்­பட்ட சம்­ப­வத்தின் பின்னர் இந்தப் பிரச்­சினை முடிந்­து­விடும் என அவர்கள் நினைத்­தனர். ஆனால் இந்தப் பிரச்­சினை ஐக்கியதேசியக் கட்சிக்கு  மட்­டு­மன்றி முழு­நாட்­டிலும் பாரா­ரிய பிரச்­சி­னையை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது.

எமது மக்­களின் வாக்­கு­க­ளினால் ஜனா­தி­ப­தி­யா­கிய ஒரு­வ­ரினால் மேற்­கொள்­ளப்­பட்ட இந்த செயற்­பாடு மக்­களின் இறை­மைக்கு விடுக்­கப்­பட்ட பாரிய அடி­யாகும். நாம் பாரா­ளு­மன்ற ஜன­நா­ய­கத்தை பாது­காக்­கவே போரா­டு­கின்றோம்.

நாம் 19 ஆவது திருத்­தத்தை  வைத்து முன்­சென்றோம். அந்தத் திருத்­த­மா­னது மக்­களின் உரி­மை­களை உறு­திப்­ப­டுத்­தி­யது. ஜனா­தி­ப­தியை பாரா­ளு­மன்­றத்­திற்கு பொறுப்­புக்­கூறும் ஒரு­வ­ராக மாற்­றினோம். ஆனால் நிறை­வேற்று அதி­கா­ரத்தை ஒழிப்­ப­தற்­காக நாம் ஜனா­தி­ப­தி­யாக நிய­மித்­தவர் இன்று பாரா­ளு­மன்­றத்தை மிதிப்பதற்கு  முற்­ப­டு­கின்றார். நாம் அதற்கு இட­ம­ளிக்­க­மாட்டோம்  எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More