Home இலங்கை உத்தராகண்ட்டில் உள்ளுராட்சி தேர்தலில் பாஜக அமோக வெற்றி…

உத்தராகண்ட்டில் உள்ளுராட்சி தேர்தலில் பாஜக அமோக வெற்றி…

by admin


உத்தராகண்ட்டில் உள்ளுராட்சி தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு மொத்தமுள்ள 7 மேயர் பதவிகளில் 5-ல் பாஜகவும் 2-ல் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன எடினத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேராடூன், ரிஷிகேஷ், காஷிபூர், ருத்ராபூர், ஹல்டுவானி ஆகியவற்றுக்கான மேயர் பதவிகளை பாஜகவும் ஹரித்துவார், கோட்தவார் ஆகியவற்றுக்கான மேயர் பதவிகளை காங்கிரசும் கைப்பற்றியுள்ளன. மேலும் 84 நகராட்சித் தலைவர் பதவிகளில் 34-ல் பாஜகவும் 25-ல் காங்கிரசும் 23-ல் சுயேச்சைகளும் 1-ல் பகுஜன் சமாஜக் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன.

அத்துடன் கவுன்சிலர் பதவிக்கு சுயேச்சைகள் அதிக எண்ணிக்கையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நேற்று முடிவு அறிவிக்கப்பட்ட 817 கவுன்சிலர் பதவிகளில் 464-ல் சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ளனர் எனவும் 215-ல் பாஜகவும் 132-ல் காங்கிரசும் வெற்றி பெற்றுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More