Home இலங்கை மன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற நாவலர் விழா :

மன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற நாவலர் விழா :

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மன்னார் மாவட்ட அறநெறிப் பாடசாலைகள் இணையம் ஏற்பாடு செய்த நாவலர் விழா நிகழ்வுகள் இன்று சனிக்கிழமை காலை மன்னார் அடம்பன் மகா வித்தியாலய பாடசாலையில் இடம் பெற்றது.

மன்னார் மாவட்ட அறநெறிப் பாடசாலைகள் இணையத்தின் தலைவர் செந்தமிழருவி தேச கீர்த்தி மஹா தர்மகுமாரக் குருக்கள் தலைமையில் இன்று சனிக்கிழமை (15) காலை 9 மணியளவில் நாவலர் திருவுருவ பவனியுடன் நாவலர் விழா ஆரம்பமானது.

-குறித்த விழாவிற்கு பிரதம விருந்தினராக மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் செல்லத்துரை கேதீஸ்வரன் கலந்து கொண்டார்.

சிறப்பு விருந்தினர்களாக மன்னார் மாவட்ட இந்து மஹா சபை தலைவர் சி.இராம கிருஸ்ணன், மன்னார் மாவட்ட இந்து ஆலயங்களின் ஒன்றியத்தின் தலைவர் மு.கதிர்காமநாதன் , மாவட்ட கலாசார உத்தியோகதர் இ. நித்தியானந்தன் ,ஆங்கில வளநிலைய முகாமையாளர் ச.சன்முகலிங்கம் , பதிவாளர் கு. பவானந்தன், உற்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்வுகள் ,கதாப்பிரசங்கம், சொல்லாடு களம், நடனம் போன்ற நிகழ்வுகளும் நாவலர் விருது வழங்கல், இறை பணியாளர் விருது வழங்கல் , நிகழ்வுகளும் மன்னார் மாவட்ட சிவபூமி இந்து இளைஞர் மன்றத்தினால் வருடாவருடம் நடக்கும் கௌரவிப்பில் இம்முறையும் அறநெறி ஆசிரியர்கள் 05 பேர் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More