Home இந்தியா குட்கா விவகாரம் – அமைச்சர் விஜயபாஸ்கர் ரகசியமாக முன்னிலை

குட்கா விவகாரம் – அமைச்சர் விஜயபாஸ்கர் ரகசியமாக முன்னிலை

by admin


குட்கா விவகாரம் தொடர்பான சிபிஐ விசாரணைக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் ரகசியமாகச் சென்று முன்னிலையாகியுள்ள நிலையில் அவரிடம் எட்டு மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

குட்கா ஊழல் முறைப்பாடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் சிபிஐ அதிகாரிகள், விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இதற்கமைய அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணனுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்ட நிலையில், கடந்த 7, 11 ஆகிய திகதிகளில் அவர் முன்னிலையாகியிருந்தார்.

இதைத் தொடர்ந்து சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோருக்கும் அழைப்பாணை அனுப்பப்பட்டதையடுத்து நேற்று காலை சிபிஐ அலுவலகத்தில் முன்னலையாகியுள்ள ரமணா மற்றும் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணனிடம் ஆகியோரிம் குட்கா முறைகேடு தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தநிலையில் நேற்று மாலை வரை அமைச்சர் விஜயபாஸ்கர் விசாரணைக்காக ரகசியமாக முன்னிலையாகியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை 8 மணிக்கு ஆரம்பித்த விசாரணையானது, 11 மணி நேரம் நடைபெற்றுள்ளது

மூவரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டதாகவும், விசாரணையின்போது குட்கா அதிபர்களிடம் லஞ்சம் வாங்கியதை உதவியாளர் சரவணன் ஒப்புக்கொண்ட போதும் அமைச்சர் விஜயபாஸ்கர் மறுப்பதாகவும் சிபிஐ அதிகாரிகள் வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More