Home இலங்கை தொலைபேசி விற்பனை நிலையத்தில் களவாடப்பட்ட பொருட்கள் மீட்பு

தொலைபேசி விற்பனை நிலையத்தில் களவாடப்பட்ட பொருட்கள் மீட்பு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கடந்த 06.12.2018 அன்று கிளிநொச்சி நகரில் உள்ள தொலைபுசி விற்பனை நிலையம் ஒன்றில் களவாடப்பட்ட பெரும் தொகைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

களவு சம்பவத்தின் போது சிசிரீவியில் பதிவான காட்சிகளை ஆதாரமாக வைத்துக்கொண்டு கிளிநொச்சி காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் களவாடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதோடு, இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (16-12-2018) முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் நிலத்திற்கு கீழ் புதைக்கப்பட்டிருந்த நிலையில் கைத்தொலைப்பேசி 43, சாஜர்கள் 10, கடையின் கதவை உடைப்பதற்கு பயன்டுத்தப்பட்ட அலவாங்கு என்பனவும் மீட்கப்பட்டுள்ளன. சந்தேக நபர்களை நீதி மன்றத்தில் முற்படுத்தவுள்ளதாகவும் கிளிநொச்சி காவல்துறையினர்; தெரிவித்துள்ளனர்.

 

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More