Home உலகம் தேர்தல் தலையீடு – 4 ரஸ்ய நிறுவனங்கள் 18 தனிநபர்கள் மீது அமெரிக்கா தடை

தேர்தல் தலையீடு – 4 ரஸ்ய நிறுவனங்கள் 18 தனிநபர்கள் மீது அமெரிக்கா தடை

by admin

தேர்தல் தலையீடு தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டுள்ள அமெரிக்கா அது தொடர்பில் மேலும் ரஸ்யாவைச் சேர்ந்த 4 நிறுவனங்கள் மற்றும் 18 தனிநபர்கள், மீது தடை விதித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின்போது, வாக்கெடுப்பில் தலையிட்டு தேர்தல் முடிவின் மீது தாக்கம் செலுத்த முயன்றதாக ரஸ்யா மீது அமெரிக்க உளவுத்துறை நிறுவனங்கள் குற்றம் சுமத்தியிருந்தன. ரஷ்ய உளவு அமைப்புகள் அரசியல் கட்சிகள், தலைவர்களின் மின்னஞ்சல்கள் , சேர்வர்களில் ஊடுருவி அத்துமீறலில் ஈடுபட்டதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியிருந்தது.

இந்த குற்றச்சாட்டை ரஸ்யா ஆரம்பத்தில் இருந்தே மறுத்து வருகின்ற போதிலும் தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைக்கும் அமெரிக்கா அங்குள்ள ரஸ்ய உளவு அமைப்புகள், நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக புதிய தடைகளை பிறப்பித்து வருகிறது.

அவ்வகையில், 18 ரஸ்ய தனிநபர்கள் மற்றும் 4 ரஸ்ய நிறுவனங்கள் மீது தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க கருவூலத்துறை தெரிவித்துள்ளது.  தடைவிதிக்கப்பட்ட 18 நபர்களில் 15 பேர், ரஸ்யாவின் பிரதான புலனாய்வு அமைப்பின் உறுப்பினர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

இது தொடர்பில் 272 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது டிரம்ப் நிர்வாகம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More