Home இந்தியா 3 ஐபிஎஸ் அதிகாரிகளை கைது செய்த ரஜ்னிஷ் ராய்  பணியிடை நீக்கம்…

3 ஐபிஎஸ் அதிகாரிகளை கைது செய்த ரஜ்னிஷ் ராய்  பணியிடை நீக்கம்…

by admin

சொராபுதீன் கொலை வழக்கு தொடர்பாக டி.ஜி.வஞ்சாரா மற்றும் ராஜ்குமார் பாண்டியன் உள்ளிட்ட மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளை கைது செய்த ரஜ்னிஷ் ராய்  பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சொராபுதீன் ஷேக், அவரது மனைவி மற்றும் உதவியாளர் ஆகிகோரை போலியாக என்கவுன்ட்டர் செய்ததாக கூறப்படும் வழக்கு தொடர்பில் மும்பையில் முக்கிய தீர்ப்பு வருவதற்கு ஒருநாள் முன்னதாக இந்த வழக்கில் முதல் விசாரணை அதிகாரியாக செயற்பட்ட ரஜ்னிஷ் ராய் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஓகஸ்ட் மாதம் விருப்ப ஓய்வு பெறுவதாக உள்துறை அமைச்சுக்கு ரஜ்னிஷ் ராய் கடிதம் எழுதியிருந்த போதிலும் மத்திய அரசு அவரது மனுவை நிராகரித்தது.

விருப்ப ஓய்வுக்கு அவர் விண்ணப்பித்த பின்னர் அலுவகம் வருவதை அவர் நிறுத்தியிருந்தால், விடுப்பை காரணம் காட்டி அவருக்கு பணியிடை நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More