Home இந்தியா விவிஐபி ஹெலிகொப்டர் பேர வழக்கு – இடைத்தரகரை ஏழு நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி…

விவிஐபி ஹெலிகொப்டர் பேர வழக்கு – இடைத்தரகரை ஏழு நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி…

by admin


விவிஐபி ஹெலிகொப்டர் பேர வழக்கில் இடைத்தரகராகச் செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேலை, ஏழு நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐ நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

1999ஆம் ஆண்டு இந்திய விமானப்படையினால் விவிஐபிகளுக்கான 12 ஹெலிகொப்டர்கள் வாங்குவது தொடர்பான திட்டம் வெளியிடப்பட்டது. 2010ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இது தொடர்பான ஒப்பந்தம் இங்கிலாந்தில் செயல்பட்டுவந்த அகஸ்டா வெஸ்ட்லாண்ட் நிறுவனத்துக்கு 3,600 கோடி ரூபாய் பெறுமதியில் வழங்கப்பட்டது. இதன்போது 12 ஹெலிகொப்டர்கள் வாங்கியதில் 423 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்ததாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து அகஸ்டா வெஸ்ட்லாண்ட் நிறுவனத்தின் இந்திய தலைவர் பீட்டருக்கு இடைத்தரகராகச் செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேலை துபாயில் இருந்து நாடு கடத்தி வந்த சிபிஐ அதிகாரிகள் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் முன்னலைப்படுத்தியதுடன் திகார் சிறையில் அடைத்தனர்.

மேலும், கிறிஸ்டியன் மைக்கேலை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்தக் காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் அமுலாக்கத் துறை அதிகாரிகள் கிறிஸ்டியன் மைக்கேலை ஏழு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோரிக்கை விடுத்த நிலையில் நீதிபதி அதற்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More