Home உலகம் புத்தாண்டு செய்தியில் அமெரிக்காவை எச்சரித்த வடகொரிய ஜனாதிபதி

புத்தாண்டு செய்தியில் அமெரிக்காவை எச்சரித்த வடகொரிய ஜனாதிபதி

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் அமெரிக்காவை எச்சரிக்கும் வகையில் வடகொரியா ஜனாதிபதி கிம் ஜொன் உன் கருத்து வெளியிட்டுள்ளார். அணுவாத தாக்குதல் நடத்தும் பொத்தான் தனது இருக்கைக்கு அருகாமையில் இருப்பதாகவும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அழுத்த தாம் தயங்கப் போவதில்லை எனவும் எனவே அமெரிக்கா யுத்தம் செய்ய முயற்சிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சியில் ஆற்றிய விசேட உரையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, தென்கொரியாவுடன் பேச்சுவார்த்தை நடாத்தத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார். சியோலில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு வடகொரியா குழுவொன்றை அனுப்பி வைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More