Home சினிமா அம்மாவுடனான சபதத்தினை நிறைவேற்றிவிட்டேன் – கீர்த்தி சுரேஷ்

அம்மாவுடனான சபதத்தினை நிறைவேற்றிவிட்டேன் – கீர்த்தி சுரேஷ்

by admin

தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்ததன் மூலம் தனது அம்மாவுடன் போட்ட சபதம் நிறைவேறிவிட்டதாக நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ள தானா சேர்ந்த கூட்டம் படம் பொங்கலுக்கு வெளிவரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் படம் குறித்து கருத்து தெரிவித்த கீர்த்தி சுரேஷ் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் தான் பிராமண பெண்ணாக நடித்துள்ளதாகவும் விக்னேஷ் சிவன் கதை சொன்ன விததும் தனது என் கதாபாத்திரமும் மிகவும் பிடித்திருந்தது எனவும் தெரிவித்துள்ளார்.

தான் பாடசாலையில் படிக்கும் காலத்தில் இருந்தே சூர்யாவின் தீவிர ரசிகை எனத் தெரிவித்த அவர் தமது அம்மா மேனகா சூர்யாவின் தந்தை சிவக்குமாருடன் 3 படங்களில் நடித்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.  ஒரு நாள் நான் சிவக்குமாரின் மகனுடன் நடிக்கிறேனா இல்லையான்னு பாருங்க என தன் அம்மாவுடன் சபதம் செய்ததாகவும் சூர்யாவுடன் நடிக்கும் கனவு நிறைவேறிவிட்டதுடன் அம்மாவுடன் போட்ட சபதத்தினையும் நிறைவேற்றி விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சூர்யா மிகவும் அமைதியாக இருப்பார், அதிகம் பேச மாட்டார். ஆனால் ஏதாவது ஆலோசனை கேட்டால் தயங்காமல் உதவி செய்வார் எனவும் கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More