Home இலங்கைமஹிந்தவின் உருவப்படம் தாங்கிய பதாகைகளை அகற்றிய காவல்துறையினர்

மஹிந்தவின் உருவப்படம் தாங்கிய பதாகைகளை அகற்றிய காவல்துறையினர்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உருவப்படம் தாங்கிய பதாகைகளை காவல்துறையினர் அகற்றியுள்ளனர். கட்சியின் உறுப்பினர் அல்லாத ஒருவரின் உருவப்படத்தைக் கொண்டு பிரச்சார பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள் அச்சிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்து காவல்துறையினர் பதாகைகளை அகற்றியுள்ளனர். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் மதவச்சிய கட்சிக் காரியாலயத்தில் இவ்வாறு பதாகைகள் அகற்றப்பட்டிருந்தன.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் அங்கம் வகிக்காத ஒருவரின் உருவப்படத்தை தாங்கிய சுவரொட்டிகள், பதாகைகள் என்பனவற்றை கட்சியின் காரியாலயத்தில் வைத்திருப்பது சட்டவிரோதமானது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
எனினும், நாட்டை பயங்கரவாதத்திலிருந்து மீட்டு எடுத்த மஹிந்த ராஜபக்ஸவின் உருவப்படத்தை எவரும் வைத்திருக்க முடியும் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More