Home சினிமா சினேகாவிடம் மன்னிப்பு கோரிய இயக்குனர் மோகன் ராஜா

சினேகாவிடம் மன்னிப்பு கோரிய இயக்குனர் மோகன் ராஜா

by admin


நடிகை சினேகாவிடம் இயக்குனர் மோகன் ராஜா மன்னிப்பு கோரியுள்ளார். வேலைக்காரன் படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள் குறித்தே இவ்வாறு மன்னிப்புக் கோரியுள்ளார்.  மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – நயன்தாரா நடிப்பில் வெளியாகி உள்ள வேலைக்காரன் படத்தில் சினேகா முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். தரமற்ற உணவுப் பொருளால் குழந்தையை பறி கொடுத்து விட்டு, அது தரமற்ற உணவு என்பதை நிரூபிக்க தானே அதை உண்டு தன்னை வருத்திக் கொள்ளும் பாத்திரம் அவருக்கு வழங்கப்பட்டிருந்தது.

இதில் நடிக்க சினேகா 18 நாட்கள் கோல்ஷீட் கொடுத்து இருந்த போதும் படத்தில் ஒரு சில காட்சிகள் தான் இடம் பெற்றதனால் கவலையடைந்த சினேகா கஷ்டப்பட்டு நடித்த காட்சிகள் நீக்கப்பட்டுவிட்டதாக குறைபட்டிருந்தார். இந்தநிலையில் இது தொடர்பிலேயே இயக்குனர் மோகன்ராஜா, சினேகாவிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

காட்சிகள் குறைக்கப்பட்ட வருத்தம் எல்லோருக்கும் இருக்கிறது எனவும் அவருடைய காட்சிகள் மட்டுமல்ல, வேறு சிலருடைய காட்சிகள் நீக்கப்பட்ட வருத்தமும் தனக்கு இருக்கிறது எனவும் யாரையும் ஏமாற்ற வேண்டும் என்பதற்காக அப்படி செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

காட்சி அமைப்பின் படி சினேகாவின் கதை 90 நாட்கள் நடப்பதாக இருக்கும் எனவும் இதற்காக அவர் நிறைய மாற்றங்களுடன் உடைகள் அணிந்து நடிக்க வேண்டியது இருந்ததுடன் முகத் தோற்றத்திலும் நிறைய பல மாறுதல் காட்ட வேண்டியது இருந்தது. அவருடைய காட்சிகளை பெரும்பாலும் தொகுப்பாக காட்டும் விதத்தில் படமாக்கப்பட்டு இருந்தது.

இதனால் தான் சினேகா அதிக நாட்கள் நடிக்க வேண்டியது இருந்தது எனவுமட அவருடைய பாத்திரம் தான் முதலில் பேசப்படும் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். எனினும் தவறு செய்து இருப்பதாக கருதினால், மன்னிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன் என்வும் அவர் சினேகாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More