Home இலங்கை 2ஆம் இணைப்பு – பிரித்தானியப் பிரஜையின் மரணம் சந்தேகநபர்கள் இருவருக்கும் விளக்கமறியல்….

2ஆம் இணைப்பு – பிரித்தானியப் பிரஜையின் மரணம் சந்தேகநபர்கள் இருவருக்கும் விளக்கமறியல்….

by admin

மாளிகாவத்தை பிரதேசத்தில் பிரித்தானியப் பிரஜை ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாளிகாவத்தைக் காவற்துறையினரால் கைது செய்யப்பட்ட இருவரும் இன்று கொழும்பு மேலதிக நீதவான் புத்திக ஶ்ரீ ராகல முன்னிலையில் முன்னிலை செய்யப்பட்டனர்இந்த நிலையில் பிரித்தானிய பிரஜையின் மரணம் இயற்கையானதா? அல்லது  கொலையாதற்கொலையா  என்பதனைக் கண்டறிவதற்காக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த காவற்துறையினர்,   அதற்கான வைத்திய அறிக்கை இதுவரை கிடைக்கவில்லை என்று காவற்துறையினர்  நீதவானிடம் கூறியுள்ளனர்.

அதன்படி இருவரையும் விளக்கமறியலில் வைக்க காவற்துறையினர் விடுத்த வேண்டுகோளை எற்றுக் கொண்ட நீதவான், இருவரையும் எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதுடன், இருவரில் ஒருவரை அடையாள அணி வகுப்புக்கு உட்படுத்துமாறும்  உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

 

மாளிகாவத்தையில் பிரித்தானிய பிரஜையின் சடலம் மீட்பு

 Jan 2, 2018 @ 09:37


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மாளிகாவத்தையில் பிரித்தானிய பிரஜை ஒருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. மாளிகாவத்தை அரலிய உயன பகுதியில் 37 வயதான பிரித்தானிய பிரஜை ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. குறித்த பிரித்தானிய பிரஜை கடந்த நவம்பர் மாதம் இலங்கை வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த வாரத்தில் அவர் நாடு திரும்ப இருந்தார் எனவும், பின்னர் தனது வீசா காலத்தை இந்த மாதம் 25ம் திகதி வரையில் நீடித்துக் கொண்டார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More