Home பிரதான செய்திகள்மேற்கிந்தி தீவுகள் அணியுடனான இருபதுக்கு இருபது போட்டி தொடரை நியூசிலாந்து கைப்பற்றியுள்ளது.

மேற்கிந்தி தீவுகள் அணியுடனான இருபதுக்கு இருபது போட்டி தொடரை நியூசிலாந்து கைப்பற்றியுள்ளது.

by admin

மேற்கிந்திய தீவுகள் அணியுடனான 3-வது இருபதுக்கு இருபதுப் போட்டியில் 119 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியுள்ளது. நியூசிலாந்து மற்றும் மேற்கிந்தி தீவுகள்இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றிருந்ததுடன் இரண்டாவது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், நியூசிலாந்து – மேற்கிந்தி தீவுகள் இடையிலான மூன்றாவது டி-20 போட்டி இன்று நடைபெற்றது.  நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாட்டத்தினை தேர்வு செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 243 ஓட்டங்களைப் பெற்றது.

இதையடுத்து, 244 வெற்றி என்ற வெற்றி இலக்குடன களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் 16.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 124 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. இதையடுத்து, 119 ஓட்ட வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதுடன், தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More