Home உலகம் தென்னாபிரிக்க பயணிகள் புகையிரத விபத்தில் 14 பேர் பலி!!!

தென்னாபிரிக்க பயணிகள் புகையிரத விபத்தில் 14 பேர் பலி!!!

by admin

தென்னாபிரிக்காவில் பயணிகள் புகையிரதம் ஒன்று லொறியுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன் 180க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தினை தொடர்ந்து புகையிரதத்தின்    பெட்டிகள் தடம் புரண்டதுடன்   தீப்பற்றி எரிந்ததாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து குறித்து தகவலறிந்ததும், மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு  சென்று காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதனால் உயிரிழந்தவர்களின்    எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதே வேளை தென்னாபிரிக்காவின்  போர்ட் எலிசபெத் நகரில் இருந்து ஜோகன்னஸ்பேர்க் நகருக்கு  புறப்பட்டு சென்ற  பயணிகள்  புகையிரதம் கடந்த  மே மாதம்  இவ்வாறு விபத்துக்குள்ளாகியமை குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More