Home இந்தியா தீவிரவாத இயக்கத்தில் இணைந்த மாணவன் பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கப்பட்டார்..

தீவிரவாத இயக்கத்தில் இணைந்த மாணவன் பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கப்பட்டார்..

by admin

காஷ்மீரில் தீவிரவாத இயக்கத்தில் இணைந்த மாணவன் பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்;. உத்தரபிரதேசத்தின் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் மண்ணியல் துறையில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வு மாணவராக உள்ள மன்னான் பஷீர் வாணி என்பவர் திடீரென தலைமறைவாகியிருந்தார்

இந்த நிலையில் அவர் கையில் இயந்திர துப்பாக்கியுடன் காணப்பட்ட தான் ஹிஜ்புல் முஜாஹிதீன் விடுதலை இயக்கத்தில் இணைந்து விட்டதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை முகநூலில் படம் வெளியிட்டிருந்தார்.

இதனையடுத்து மன்னான் தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி பேராசிரியர்கள் அடங்கிய குழு ஒன்றினை பல்கலைக்கழக நிர்வாகம் அமர்த்தியுள்ளது.

அத்துடன் விடுதிகளில் நுழையும் மாணவர்களிடம் அடையாள அட்டைகளை சரிபார்த்து அனுப்பும்படியும் வெளிஆட்கள் எவரையும் அனுமதிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை மன்னான் தீவிரவாத இயக்கத்தில் இணைந்ததை ஹிஜ்புல் முஜாஹித்தீன் இயக்கமும் உறுதிப்படுத்தியுள்ளது

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More