Home இலங்கை பெண் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டு – தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் கைது

பெண் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டு – தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் கைது

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பெண் ஒருவரைத் தாக்கினார் என்ற குற்றச்சாட்டில் நாகராசா பகிரதன் கைது செய்யப்பட்டார் என்று மானிப்பாய் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  வேட்பாளரின் குடும்பத்துக்கும் அயல் வீட்டிலுள்ள குடும்பத்துக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டநிலையில் வேட்பாளரின் மனைவி அயல் வீட்டுப் பெண்ணுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் அந்தப் பெண் வேட்பாளரின் வீட்டுக்குச் சென்று பேசியுள்ளார். அதன்போது அந்தப் பெண்ணை வேட்பாளர் தாக்கியுள்ளார்.என விசாரணைகளில் தெரியவந்துள்ளது என காவல்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் தாக்குதலுக்குள்ளான பெண் நேற்று முறைப்பாடு வழங்கினார் எனவும் அதனடிப்படையில் மானிப்பாய் பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் நாகராசா பகிரதன் இன்று காலை கைது செய்யப்பட்டார் என காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More