Home இந்தியா கொழும்புக்கும் தூத்துக்குடிக்கும் இடையே மீண்டும் சரக்கு கப்பல் சேவை ….

கொழும்புக்கும் தூத்துக்குடிக்கும் இடையே மீண்டும் சரக்கு கப்பல் சேவை ….

by admin


கொழும்புக்கும் தூத்துக்குடிக்கும் இடையேயான சரக்கு கப்பல் சேவை மீண்டும்  ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  இந்தியாவின் தனுஷ்கோடிக்கும், இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையே 1914 இல் ஆரம்பிக்கப்பட்ட கப்பல் போக்குவரத்து 1964ஆம் ஆண்டு புயல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்தது. பின்னர் மீண்டும் 1965-ம் ஆண்டிலிருந்து ராமேஸ்வரத்திலிருந்து தலைமன்னாருக்கு கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்ட போதும்

இலங்கை உள்நாட்டு யுத்தம் காரணமாக 1983-ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. பின்னர், 2009-ம் ஆண்டு யுத்ததம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தூத்துக்குடி மற்றும் கொழும்புக்கிடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்ட போதும் தமிழக அரசின் எதிர்ப்பினால் அதுவும் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையில் மீண்டும் பயணிகள் கப்பல் சேவை மற்றும் சரக்கு கப்பல் சேவை ஆரம்பிப்தற்கான ஆவணங்களை துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் மகிந்த சமரசிங்க நாடாளுமன்றத்தில் கடந்த ஒக்டோபர் மாதம் தாக்கல் செய்திருந்தார்.

இதற்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதையடுத்து, கொழும்பு துறைமுகத்திலிருந்து தூத்துக்குடிக்கும் இடையே சரக்கு கப்பல் சேவை நேற்று ஆரம்பமாகியுள்ளது.

தாய்லாந்து தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ‘எம்.வி.சார்லி’ என்ற சரக்கு கப்பல் வாரத்தில் இரு நாட்கள் கொழும்பு – தூத்துக்குடிக்கு இடையே பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More