Home இலங்கை பெண்களுக்கு எதிரான வன்முறை குற்றச்சாட்டின் கீழ், சாமர சம்பத் தஸநாயக்க உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்…

பெண்களுக்கு எதிரான வன்முறை குற்றச்சாட்டின் கீழ், சாமர சம்பத் தஸநாயக்க உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்…

by admin


பெண்களுக்கு எதிரான வன்முறை குற்றச்சாட்டின் கீழ் ஊவா மாகாண முதலமைச்சர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என அதிபர்கள் தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டாளர் ஜோசப் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

அதிகாரத்திற்கு கட்டுப்படாத பதுளை பாடசாலை அதிபரை மண்டியிட வைத்தமை குறித்து இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை அதிபர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டிய மாகாண கல்விச் செயலாளரின் பொறுப்பற்ற செயற்பாடு குறித்து அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரினார்.

மேலும் அரச சேவையின் உயர் பதவி வகிக்கும் ஜனாதிபதியின் செயலாளர் இது தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்தி குறித்த தமிழ் பாடசாலை அதிபருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளர்.

இதேவேளை பதுளை மகளிர் தமிழ் பாடசாலை அதிபரை ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க அச்சுறுத்திய சம்பவத்தை ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி கண்டிப்பதாக கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறியுள்ளார்.

ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க, பதுளை மகளிர் தமிழ் பாடசாலை அதிபரை தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அழைத்து திட்டி அச்சுறுத்திய சம்பவம் ஒன்று அண்மையில் இடம்பெற்றது.  இது தொடர்பான விசாரணைகளை தற்போது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More