Home இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக பாரியளவில் போராட்டம் நடத்தப்படும் – லஹிரு வீரசேகர

அரசாங்கத்திற்கு எதிராக பாரியளவில் போராட்டம் நடத்தப்படும் – லஹிரு வீரசேகர

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அரசாங்கத்திற்கு எதிராக பாரியளவில் போராட்டம் நடத்தப்படும் என அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார். மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரியை ரத்து செய்வதாக அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள்  நிறைவேற்றப்படாமைக்கு எதிர்ப்பை வெளியிட்டு பாரியளவில் போராட்டம் நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலில் அளித்த வாக்குறுதிகளையே அரசாங்கம் நிறைவேற்றத் தவறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மாறாக அரசாங்கம் தற்போது உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வெற்றியீட்டும் நோக்கில் புதிதாக வாக்குறுதிகளை அளித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More