Home பிரதான செய்திகள் அவுஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் – உபாதை காரணமாக நடால் வெளியேற்றம் – சிலிச் – எட்மண்ட் அரையிறுதிக்கு

அவுஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் – உபாதை காரணமாக நடால் வெளியேற்றம் – சிலிச் – எட்மண்ட் அரையிறுதிக்கு

by admin


அவுஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி ஆட்டத்தின் போது ஏற்பட்ட உபாதை காரணமாக நடால் வெளியேறியுள்ளார். இதனையடுத்து சிலிச் மற்றும் எட்மண்ட் அரையிறுதிக்கு முன்னனேறியுள்ளனர்.  இன்று ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இரண்டு காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. அந்தவகையில் முதலாவது போட்டியில் டிமிட்ரோவ், இங்கிலாந்தின் கைல் எட்மண்ட்டை எதிர் கொண்டநிலையில் தோல்வியடைந்து வெளியேறினார்.


இதனை அடுத்து இட்பெற்ற மற்றைய போட்டியில் ரபெல் நடால் மரின் சிலிச்சை எதிர்கொண்டார். முதல் நான்கு செட் முடிவில் இருவரும் தலா 2 செட்களை கைப்பற்றி சமநிலையில் இருந்த போது நடாலுக்கு ஏற்பட்ட உபாதை காரணமாக அவர் வெளியேறினார். இதனால் சிலிச் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இந்தநிலையில் எதிர்வரும் 25ம் திகதி சிலிச் மற்றும் எட்மண்ட் ஆகியோர் அரையிறுதிப் போட்டியில் போட்டியிவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More