Home இந்தியா இசைஞானி இளையராஜாவுக்கு இந்தாண்டிற்கான பத்ம விபூஷன் விருது

இசைஞானி இளையராஜாவுக்கு இந்தாண்டிற்கான பத்ம விபூஷன் விருது

by admin


இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவுக்கு இந்தாண்டிற்கான பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு இந்திய மத்திய அரசினால் வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றாக பத்மவிபூஷண், விருது கருதப்படுகின்றது. இன்றையதினம் இந்த ஆண்டிற்கான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி பாரத் ரத்னா விருதுக்கு அடுத்த படியாக இந்தியாவின் 2-வது உயரிய குடிமகனுக்கு வழங்கப்படும் பத்ம விபூஷன் விருது இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2010-ம் ஆண்டு இளையராஜாவுக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதுதவிர மதுரை தியாகராஜர் கல்லூரியின் துறை தலைவர் பேராசிரியர் ராஜகோபாலன் வாசுதேவன், தமிழக நாட்டுப்புற கலைஞர் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன், கோவையை சேர்ந்த யோகா பயிற்சியாளர் ஞானம்மாள் (98), அரவிந்த் குப்தா, லட்சுமி குட்டி (கேரளா), சுபசினி மிஸ்திரி (மேற்குவங்கம்), பாஜு ஷ்யாம், சுதன்{ பிஸ்வாஸ், சுலாகட்டி நரசம்மா உள்ளிட்டோருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More