Home இலங்கை மைத்திரியும் ரணிலும் எனக்கு இலவச பிரச்சாரத்தினை வழங்குகின்றனர் – மஹிந்த ராஜபக்ஸ

மைத்திரியும் ரணிலும் எனக்கு இலவச பிரச்சாரத்தினை வழங்குகின்றனர் – மஹிந்த ராஜபக்ஸ

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் தமக்கு இலவச பிரச்சாரத்தினை வழங்கி வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தம்பள்ள பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகம் சிறிகொத்தவிற்கு சென்று சுதந்திரக் கட்சியின் கொள்கைகளை காட்டிக் கொடுத்த ஒரே தலைவர் மைத்திரிபால சிறிசேன எனத் தெரிவித்துள்ளார். தமது கூட்டங்களில் பங்கேற்கும் மக்களை பார்த்ததன் பின்னர், குழப்பமடையும் ஜனாதிபதியும் பிரதமரும் தமக்கு இலவசமாக பிரச்சாரத்தை வழங்கி வருகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

என்னைத் திட்டுவதன் மூலம் மக்கள் அணி திரள்வதனை தடுத்து நிறுத்திவிட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். அமைச்சரவை அமைச்சர் ஒருவரே இந்த அரசாங்கத்தை மிகவும் இழிவாக திட்டுகின்றார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More