Home இலங்கை சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை அமைக்கத் தயாராகி வரும் ஜனாதிபதி?

சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை அமைக்கத் தயாராகி வரும் ஜனாதிபதி?

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..


தனிச் சுதந்திரக் கட்சி அரசாங்கமொன்றை அமைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்கினால், தனித்து அரசாங்கமொன்றை அமைக்கத் தயார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். சுதந்திரக் கட்சியின் 96 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒருமித்து ஆதரவளித்தால், தனி அரசாங்கமொன்றை அமைக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். நாளைய தினமே புதிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கு தாம் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More