Home இலங்கை மிக் விமான ஊழல் கைதுக்கு பயந்து கோதபய நாட்டை விட்டு வெளியேறிவிட்டாரா?

மிக் விமான ஊழல் கைதுக்கு பயந்து கோதபய நாட்டை விட்டு வெளியேறிவிட்டாரா?

by admin

மிக் விமான கொடுக்கல் வாங்கலில் இடம்பெற்ற மோசடிகளுக்காக தான் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் கோதபய ராஜபக்ஸ நாட்டைவிட்டு தப்பிச் சென்று விட்டதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.  இன்றையதினம் கடவத்தையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண’டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ராஜபக்ஸக்கள் காலத்திலேயே முன்னணிப் பத்திரிகையாளர்லசந்த கொல்லப்பட்டதாகவும் கோதபய ராஜபக்ஸவினால் மேற்கொள்ளப்பட்ட மிக் விமான ஊழல் தொடர்பாக செய்தி வெளியிட்டமைக்காகவே அவர் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மலர்மொட்டுச் சின்னத்தின் எதிர்கால ஜனாதிபதி வேட்பாளரான கோதபய ராஜபக்ஸ தேர்தல் முடிந்த பின்னரே நாடு திரும்புவார் எனவும் குற்றச்சாட்டுக்கள் நிமூபிக்கப்பட்டதும் அவரை கைது செய்வதற்கான அனைத்து விடயங்களும் தயாராகவே உள்ளன எனவும் தெரிவித்துள்ளார். மிக் விமான கொடுக்கல் வாங்கலின் போது கொள்ளையடிக்கப்பட்ட பணம் ஐந்து இந்தியர்களின் பெயரில் ஹொங்கொங் வங்கியில் வைப்புச்செய்யப்பட்டுள்ளதாகவும் ராஜித தெரிவித்துள்ளார்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More