Home உலகம் கென்யாவின் முக்கிய தொலைக்காட்சி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன

கென்யாவின் முக்கிய தொலைக்காட்சி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கென்யாவின் மூன்று முக்கிய தொலைக்காட்சி நிறுவனங்கள் மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரையில் மூடப்பட்டுள்ளன.
எதிர்க்கட்சித் தலைவரின் அதிகாரபூர்வமான பதவிப் பிரமாண நிகழ்வுகளை ஒளிபரப்புச் செய்ய இந்த மூன்று தொலைக்காட்சி நிறுவனங்களும் திட்டமிட்டிருந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த காரணத்தினால் குறித்த மூன்று தொலைக்காட்சி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.

விசாரணைகள் பூர்த்தியாகும் வரையில் தொலைக்காட்சி நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கென்யாவின் உள்துறை அமைச்சர் பிரெட் மட்டியான்ஜி இதனைத் தெரிவித்துள்ளார். கென்யாவின் எதிர்க்கட்சித் தலைவரை மக்களின் ஜனாதிபதி எனத் தெரிவித்து அவரதுப் பதவிப் பிரமாண நிகழ்வுகளை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.

 

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More