Home இந்தியா பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர் – இரு இளைஞர்களுக்கு தலா 10 ஆண்டு சிறை…

பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர் – இரு இளைஞர்களுக்கு தலா 10 ஆண்டு சிறை…

by admin

விழுப்புரம் அருகே பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வழக்கில் இரு இளைஞர்களுக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது கடந்த 2013-ம் ஆண்டு இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் விசாலாட்சி என்பரின் புகாரின் பேரில் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

விழுப்புரம் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கில் நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பில் குற்றம்சாட்டப்பட்ட இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த அபராத தொகையை, பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நஷ்டஈடாக வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More