Home இலங்கை இலங்கைக்கும் பிரித்தானியாவிற்கும் இடையிலான உறவுகள் வலுவடைந்துள்ளது – பிரித்தானிய மஹாராணி

இலங்கைக்கும் பிரித்தானியாவிற்கும் இடையிலான உறவுகள் வலுவடைந்துள்ளது – பிரித்தானிய மஹாராணி

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கைக்கும் பிரித்தானியாவிற்கும் இடையிலான உறவுகள் வலுவடைந்துள்ளதாக பிரித்தானிய மஹாராணி இரண்டாம் எலிசபத் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் தொடர்ச்சியாக வலுப்பெற்று வருகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் 70ம் சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஆண்டுகளிலும் இரு நாடுகளினதும் மக்களுக்கு இடையிலான உறவுகள் மேலும் மேம்படும் என தாம் கருதுவதாகத் தெரிவித்துள்ளார். இளவரசர் ஏர்ள் தம்மைப் பிரதிநிதி;த்துவம் செய்து இலங்கைக்கு பயணம்; செய்துள்ளமை மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More