Home இலங்கை புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் மஹிந்த தமிழ் மக்களின் உரிமைகளை உறுதி செய்யவில்லை

புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் மஹிந்த தமிழ் மக்களின் உரிமைகளை உறுதி செய்யவில்லை

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தமிழ் மக்களின் உரிமைகளை உறுதி செய்யவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னரும், தமிழ் மக்களின் உரிமைகளை உறுதி செய்வதற்கு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முனைப்பு காட்டவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அனைத்து இன சமூகங்களை இணைப்பதற்கு பதிலாக மஹிந்த ராஜபக்ஸ பிரித்தாளும் கொள்கைகளை பின்பற்றி ஆட்சி நடத்தினார் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். காணாமல் போனோர் அலுவலகம் விரைவில் இயங்க ஆரம்பிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More