Home இலங்கை உதயங்க வீரதுங்க சர்வதேச காவல்துறையினரால் கைது

உதயங்க வீரதுங்க சர்வதேச காவல்துறையினரால் கைது

by admin


அமெரிக்கா சென்றுகொண்டிருந்த உதயங்க வீரதுங்கவை, துபாய் விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்த சர்வதேச காவல்துறையினர் அவரை துபாய் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து உதயங்கவை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக விசேட காவல்துறைக் குழுவொன்று துபாய் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிக் விமான கொடுக்கல் வாங்கல்கள் உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பில் உதயங்கவிற்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

இது தொடர்பான விசாரணைகள் நிதிக்குற்ற தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், விசாரணைகளுக்கு சமூகமளிப்பதற்கு உதயங்க தவறியுள்ள நிலையில் அவருக்கு எதிராக சர்வதேச பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More