Home பிரதான செய்திகள் சிம்பாப்வே அணிக்கு எதிரான 20க்கு 20 கிரிக்கெட் தொடரை ஆப்கானிஸ்தான் கைப்பற்றியது..

சிம்பாப்வே அணிக்கு எதிரான 20க்கு 20 கிரிக்கெட் தொடரை ஆப்கானிஸ்தான் கைப்பற்றியது..

by admin

சிம்பாப்வே அணிக்கு எதிரான இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடரை ஆப்கானிஸ்தான் அணி கைப்பற்றியுள்ளது

சிம்பாப்வே அணிக்கு எதிரான 2-வது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் 17 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியுள்ளது சார்ஜாவில் நடைபெற்ற முதலாவது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றியீட்டிருந்தது.

இந்தநிலையில் சார்ஜாவில் நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற சிம்பாப்வே பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி அணி முதலில் துப்பாடிய ஆப்கானிஸ்தான் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 158 ஓட்டங்களைப் பெற்றது. இதைத்தொடர்ந்து, 159 ஓட்டங்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிம்பாப்வே அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 141 ஓட்டங்களை எடுத்திருந்தது. இந்தநிலையில ஆப்கானிஸ்தான் அணி 17 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றியீட்டியதுடன் தொடரையும் 2-0 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் அணி கைப்பற்றியுள்ளது. ஆட்ட நாயகனாக மொகமது நபி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More