Home இலங்கை வாக்காளர்களுக்கு மஹிந்த நன்றி தெரிவிப்பு

வாக்காளர்களுக்கு மஹிந்த நன்றி தெரிவிப்பு

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நன்றி தெரிவித்துள்ளார். தமக்கு வாக்களித்த அனைத்து தரப்பினருக்கும் முன்னாள் ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளார். முகநூல் ஊடாக இதனை தெரிவித்துள்ள அவர் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தமது ஆணையை வெளிப்படுத்தியுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.

ஊழல் மோசடி மிக்க அரசாங்கத்தை எதிர்த்தும், நாட்டை நல்வழிப்படுத்தும் பொறுப்பினை ஏற்றுக்கொள்ளுமாறு ஸ்ரீலங்க பொதுஜன முன்னணியிடம் கோரும் வகையிலும் மக்கள் வாக்களித்துள்ளனர். இந்த வெற்றிக்கு அர்ப்பணிப்புடன் பங்களிப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி பாராட்டுவதாகவும், அமைதியாக வெற்றியைக் கொண்டாடுமாறும் அவர் கோரியுள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More