Home இந்தியா பாரதிராஜா மீது வழக்குப்பதிவு செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு

பாரதிராஜா மீது வழக்குப்பதிவு செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு

by admin

இயக்குனர் பாரதிராஜா மீதான புகார் தொடர்பில் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்யும்படி காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இயக்குனர் பாரதிராஜா வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக, இந்து மக்கள் முன்னணி சார்பில் காவல் நிலையத்தில் வழங்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடத்தப்படவில்லை எனத் தெரிவித்து இதையடுத்து இந்து மக்கள் முன்னணி சார்பில் உயர்நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.

குறித்த மனுமீதான விசாரணை இன்று விசாரணைக்கு வந்துள்ள நிலையில் மனுதாரரின் மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம் இயக்குனர் பாரதிராஜா மீதான புகார் குறித்து விசாரிக்க காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்தது. மேலும் வன்முறையை தூண்டும் வகையில் பாரதிராஜா பேசியதாக வழங்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More